இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாகுபலி படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கியுள்ள, ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும், ரத்தம் ரணம் ரவுத்திரம் படம், ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படக்குழுவினர் நேற்று முன்தினம், தமிழ் பதிப்பின் முன்னோட்டத்தை சென்னையில் வெளியிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் அளித்த பேட்டி:
நடிகை ஆலியா பட்: என் திரை பயணத்தை இங்கு தான் ஆரம்பித்தேன்; மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு இயக்குனர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும். இயக்குனரின் பார்வை முக்கியம். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன். இப்படத்தில் நடித்தது, இனிமையான அனுபவமாக இருந்தது.
ராம்சரண்: ராஜமவுலியுடன் வேலை செய்வது சவாலானது. நான் பிறந்தது சென்னை; தமிழ் என் இரண்டாவது தாய்மொழி. தமிழில் பேசியது சிறந்த அனுபவமாக இருந்தது.
ஜூனியர் என்.டி.ஆர்.,: ராஜமவுலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அதுவே எனக்கு பயத்தையும் தந்தது. தென்னிந்திய சினிமா பிறந்ததே சென்னையில் தான். தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது.
ராஜமவுலி: சென்னை தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தது. படம் எடுக்கும் போதே, பெரிய படம் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான். ஆனால், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும். பாகுபலி வெற்றிக்கு காரணம், 'எமோஷன்' தான். ஆர்ஆர்ஆர் படத்தில் அந்த, 'எமோஷன்' அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.