ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. அல்லு அர்ஜுன் ஜோடியாக அவர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் 17ம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புஷ்பா குழுவினரை வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, “கீதா கோவிந்தம்' படத்தின் இசை வெளியீட்டில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது, அவருடன் நடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையைத் தெரிவித்தேன். இன்று நான் அவருடைய ஸ்ரீ வள்ளி. இந்த வாய்ப்பை வழங்கிய அல்லு அர்ஜுனுக்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நான் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடித்தேன். அதனால் எனது பெற்றோரைக் கூடப் பார்க்கவில்லை. அவர்கள் என்னை மறுத்துவிட்டார்கள். அதனால் சுகுமார் சார் என்னை ததெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உடனே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புகிறேன்.
அல்லு அர்ஜுனுக்காக புஷ்பா படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் 5 முதல் 10 சதவீதம் பேராவது என்னையும் பார்க்க வருவார்கள். இப்படத்தை ஸ்டார்களுக்காகக் பார்க்காமல் அந்தக் கதாபாத்திரங்களுக்காகப் பார்க்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். குறிச்சி வச்சிக்குங்க, டிசம்பர் 17ம் தேதி ஒரு சிறப்பான டிரீட்டை நீங்க பார்க்கப் போறீங்க,” என்றார்.