தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் லேட்டஸ்ட் வரவு ராஷ்மிகா மந்தனா தான். இதில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இந்தநிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் ரஷ்மிகா, இந்தப்படம் வரும் டிச-17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ராஷ்மிகா பற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் மத்தியில் தேசிய அளவிலான 'க்ரஷ்' ஆக மாறிவிட்டார் ராஷ்மிகா. அதனால் நான் கூட ராஷ்மிகாவை க்ரஷ்மிகா என்றுதான் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவேன்... நாம் பணியாற்றும்போது ஒருசிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும்.. அப்படி ஒருவர் தான் ராஷ்மிகா. சரியான, இயக்குனர்கள், சரியான கதையை தேர்வு செய்தால் அவரது திறமைக்கு வரும் காலங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என பாராட்டு பத்திரமும் வாசித்தார் அல்லு அர்ஜுன்.