தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
ஒரு காலத்தில் படங்களை தான் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து தொலைக்காட்சிகளின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டது. அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் டிவி ஒன்று நான்கு நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக தொடர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புதிய தொடரில் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் நால்வரையும் ஒரே சீரியலில் நடிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரம்மாண்டத்தை நிகழ்த்த அந்த டிவி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் கொங்கு மண்டலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.