இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. முதல் நாள் வசூலாக 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படம் 'புஷ்பா' என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது. இப்படம் மூலம் பான்-இந்தியா ஸ்டார் ஆக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளார்.
அவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியாக அதிகமான பார்வைகளைப் பெற்ற படங்களாக உள்ளன. ஆனால், அவரது படங்கள் தெலுங்கில் வெளிவரும் நாளில் ஹிந்தியிலும் வெளியாவது 'புஷ்பா' படத்தில்தான் நடந்துள்ளது.
இத்தனைக்கும் ஹிந்தியில் படத்தை பெரிய அளவில் பிரமோஷனும் செய்யவில்லை. இருந்தாலும் அங்கு முதல் நாளில் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
தமிழில் கூட நேற்று இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழிலும் படத்தை சரியாக பிரமோஷன் செய்யவில்லை. பத்திரிகையாளர் காட்சியைக் கூட நாளைக்குத்தான் நடத்துகிறார்கள். தெலுங்கில் காட்டிய அக்கறையை மற்ற நான்கு மொழிகளுக்கும் காட்டியிருந்தால் இப்படம் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என டோலிவுட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.