தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எளிய முறையில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு 19வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சத்யம் சினிமாஸ் , பிவிஆர் , எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த திரைப்பட விழா நடக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது ஆகியவற்றுக்கான போட்டிகள் தனியாக நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ஐந்து உணர்வுகள், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், சேத்துமான், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே படங்கள் ஆகியவை கலந்து கொள்கின்றன.