தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காகித பூக்கள். எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து, கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக லோகன் மாணிக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியதர்ஷினி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அப்புச்சி கிராமம் புகழ் பிரவீன் குமார் மற்றும் சமீபத்தில் மறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் தவசி ஆகியோர் நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோஸ் நந்தா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் முத்து மாணிக்கம் கூறியதாவது : குடி பழக்கத்தாலும், தனது பொறுப்பின்மையாலும் தனது அன்பான மனைவியை பிரிந்து வாடும் கணவன், மீண்டும் தனது உயிரை பணயம் வைத்து அவளை அடைகிறான். ஆனாலும் மனதில் ஏற்பட்ட வடுக்கள் மறையுமா..? ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை திரும்பவும் அடைய முடியாது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. என்றார்.