படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து கடந்த இரண்டு மாதங்களாக இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் என்கிற பெயரில் உருமாறிய கொரோனா மூன்றாவது அலையாக மாறி ஆரம்பகட்டத்தில் உள்ளது. சமீபத்தில் லண்டன் படப்பிடிபுகாக சென்ற இடத்தில் வடிவேலு, இயக்குனர் சுராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மோகன்லாலை வைத்து பெருச்சாழி, அர்ஜுன் நடித்த நிபுணன், பிரசன்னா - சினேகாவின் காதல் திருமணத்திற்கு வழிவகுத்த அச்சமுண்டு அச்சமுண்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரானால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சற்றே நகைச்சுவையுடன், “எனது வீட்டுக்கு ஒமைக்ரான் என்கிற விருந்தாளி வந்துள்ளார். இப்போதைக்கு அவர் என்னை பெரிதாக துன்புறுத்தவில்லை.. அதனால் நண்பர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசி மற்றும் கயாவில் கும்பமேளாவில் கலந்துகொண்டு காட்சிகளை படமாக்கினோம். 28 நாட்கள் கிட்டத்தட்ட 150 பேர் என்னுடன் செட்டில் பணியாற்றினார்கள்.. ஆனால் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா என்பது லாஜிக்கே இல்லாத மசாலா படம் போன்றது” என கூறியுள்ளார் அருண் வைத்தியநாதன்.
இவர் தற்போது வெங்கட்பிரபு, சினேகா, யோகிபாபு ஆகியோரை வைத்து ஷாட் பூட் 3 என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தபடம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது.