தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்னானி என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நாளை (ஜன-3) முதல் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
பொதுவாகவே கவுதம் மேனன், சிம்பு ஆகியோரின் படங்கள் பல காரணங்களால் தாமதமாவது வழக்கம் தான். ஆனால் இந்தப்படத்தை விரைந்து முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவுதம் மேனன். மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது மாறிவரும் சூழலை மனதில் கொண்டு இந்த மாதத்திற்குள்ளேயே படத்தை முடித்துவிடும் மும்முரத்தில் இருக்கிறார் கவுதம் மேனன்.