இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் இசை பணியை சந்தோஷ் நாராயணன் லண்டனில் தொடங்கியதை அடுத்து வடிவேலுவும் இயக்குனர் சுராஜ்-ம் லண்டன் சென்று இருந்தார்கள். பத்து நாட்களாக லண்டனில் தங்கி விட்டு சென்னை திரும்பிய அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் வடிவேலுவை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதையடுத்து வடிவேலு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் என்னிடத்தில் நலம் விசாரித்தார்கள். மக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று வடிவேலு தெரிவித்திருக்கிறார்.