பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
தெலுங்கு சினிமாவில் 'பிரின்ஸ்' என்று அன்போடு அழைக்கப்படுகிறவர் மகேஷ் பாபு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு முழங்கால் வலி பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 14ம் தேதி ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முழுங்கால் பிரச்சினை குணமாகி படப்பிடிப்புக்கு திரும்பும் வேளையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான், மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன்.
என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் தடுப்பூசி கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.