இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமான தமன், பின்னர் இசையில் கவனத்தை செலுத்தினார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியா முழுக்க கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து தமனும் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமன் கூறுகையில், ‛‛கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் சிவகார்த்திகேயனின் 20வது பட பணிகளை துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனால் இவர்களும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.