தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் காவ்யா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்தார். இப்போது சினிமா நடிகை ஆகிவிட்டார்.
படத்தில் நடிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானது வேறொரு படத்தில் ஆனால் ரிப்புபரி எனது முதல் திரைப்படமாக அமைந்து விட்டது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்தபோதுதான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என்னுடைய கதாபாத்திரம் பிரபலமானதும், பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நினைத்த மாதிரி சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நான் சீரியலில் நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுட்டதாக இது இருக்கும். கிராமப்புற பின்னணியில் திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. நான் மகேந்திரன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.