படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா(79). இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர், இப்போது படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுப்பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாடலாசிரியர் வைரமுத்து இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
வைரமுத்து கூறுகையில், ‛‛நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு. எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம். மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு. கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம் பெறவும் வலம் வரவும் வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜா போன் மூலம் பாரதிராஜாவிடம் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.
வீடு திரும்பிய பாரதிராஜா
தன் உடல்நலம் குறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை : கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று(டிச., 31) இல்லம் திரும்பிவிட்டேன். நடேசன், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள், திரைத்துறையினர், அரசியல் பெருமக்கள், உறவுகள் ஆகியோருக்கும் நன்றி. பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்கள் அணிந்து பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.