கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.
அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்கு துவங்கி தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளதை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மீரா ஜாஸ்மின் எப்போதும் போல பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார். உங்களுடைய நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் சேச்சி” என கூறி மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு மீரா ஜாஸ்மினும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.