ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.
விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். இதன் காரணமாகவே இப்படி கூறியிருக்கிறார்.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்து படித்து வருபவர். விஜய்யை வைத்து தனது முதல் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் துருவ் விக்ரம் தான் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார். அதனால் சஞ்சய் தனது முதல் படத்தை விஜய்யை வைத்து இயக்குவாரா? இல்லை துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.