ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆரம்பமானது. தெலுங்கில் 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே லண்டன், புதுச்சேரி ஆகிய இடங்களை மோஷன் போஸ்டரில் காட்டியிருந்தார்கள். இரண்டு இடங்களையும் கதைக்களமாகக் கொண்ட படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வெளிநாட்டு கதாநாயகி ஒருவர் தேவையாம். ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் அந்த வெளிநாட்டு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படத்தின் கதாநாயகிகள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.