ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமென்மேன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அஞ்சல என்ற படத்தை இயக்கிய தங்கம் சரவணன் இயக்குகிறார். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ்மோகன், அபிராமி ராகுல், ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். மோகன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் தங்கம் சரவணன் கூறியதாவது: உலகம் முழுக்க அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். இது ஆக்சன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். சசிகுமார் என்னுடைய முந்தைய படமான 'அஞ்சல' படம் பார்த்து, என்னுடைய முயற்சியை முழுமையாக பாராட்டினார். அவர் இந்த திரைக்கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமாரின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங்களும் உள்ளது. என்றார்.