ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு கங்கை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். படங்களை இயக்கவும் செய்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் இருவரும் கலந்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்தார்கள். இளையராஜா குறித்து பல இடங்களில் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும், கங்கை அமரனும் இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்மடூடியோவில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த படத்தை கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, "இறை அருளுக்கு நன்றி. உறவுகள் தொடர்கதை" என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது .இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.