அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? |

பல வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா முதன்முறையாக 'ஹே சினாமிகா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்திற்கான டைட்டில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற ஏய் சினாமிகா என்கிற பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டது என்பது நமக்கு முன்பே தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளை டைட்டிலாக ஏன் வைத்தேன் என்றும் அதுகுறித்து மணிரத்னத்திடம் தான் பேசியதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.
'சினமிகா என்றாலே கோபப்படுகிற பெண் என்று அர்த்தம். என்னுடைய கதைக்கு அதுதான் பொருத்தமான பெயராக தோன்றியது. டைட்டிலை முடிவு செய்ததும் இந்த விஷயத்தை மணிரத்னத்திடம் போன் செய்து கூறினேன். நான் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், தாராளமாக வைத்துக்கொள்.. அப்படியே எனக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூட போட்டுக்கொள் என தமாஷாக கூறினார்" என்று கூறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.




