கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், இளம் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், அவர்களுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் என்றும் பல பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இருவருமே ஹிந்திப் படங்களில் அறிமுகமாவதன் மூலம் பாலிவுட்டில் கால்பதித்துள்ளனர். விரைவில் அவர்களது நேரடி ஹிந்திப் படங்கள் வெளியாக உள்ளது. இதனால், பொறாமை அடைந்து யாராவது அவர்களைப் பற்றிய வதந்திகளைக் கிளப்பி விட்டுள்ளதாகவே தெலுங்குத் திரையுலகில் சொல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல மீடியாக்களில் விஜய், ராஷ்மிகாவின் காதல் பற்றிய செய்தி வெளியானது. அவற்றை விஜய்யும் படித்திருப்பார் போலிருக்கிறது.
நேற்று சமூகவலைதளத்தில் 'வழக்கம் போல நான்சென்ஸ்' என்று ஒரு பதிவிட்டுள்ளார் விஜய். எதைப் பற்றி அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் படிப்பவர்களுக்குத் தெரியாதா ?.