ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
மணிகண்டன் இயக்கத்தில் பிப்ரவரி 11ந்தேதி வெளியான படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்து வியந்து போன இயக்குனர் மிஷ்கின், மணிகண்டனை உசிலம்பட்டியில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டி இருக்கிறார். அதையடுத்து இப்படத்தில் நாயகனாக நடித்து இருந்த நல்லாண்டியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு மிஷ்கின் கூறுகையில், ‛‛கடைசி விவசாயி தந்த மகா கலைஞனாக மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பை தமிழுக்கு தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன். அப்படத்தின் கதையின் நாயகனான ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த ஒரு நாள் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்'' என தெரிவித்துள்ளார்.