ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

அஜித் ரசிகர்களின் மனதில் நிறைந்த ஒரு படம் என்றால் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ல் வெளிவந்த 'மங்காத்தா' படத்தைச் சொல்லலாம். வித்தியாசமான அஜித்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார் வெங்கட் பிரபு. அடுத்து எப்போது 'மங்காத்தா 2' எடுக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அஜித்தோ தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் பயணித்தார். இப்போது வினோத்துடன் பயணித்து வருகிறார். அவரது பார்வை எப்போது வெங்கட் பிரபு பக்கம் திரும்பும் என்றுதான் தெரியவில்லை.
இதனிடையே, நாளை வெளியாக உள்ள 'வலிமை' படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டதாக வெங்கட் பிரபு நேற்று பதிவிட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன், “பிரபு, பிரேமையும் கூட்டிட்டு போ” எனக் கமெண்ட் போட்டிருந்தார்.
ஒரு குறும்புக்கார ரசிகர், “விட்டுபுட்டே படம் எடுக்க மாட்டாங்க, விட்டுபுட்டா படம் பாப்பாங்க,” என குறும்புத்தமானக் போட்டிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அவரது தம்பியான பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்த விஷயம். அஜித் படத்தைப் பார்க்க தம்பி பிரேம்ஜியை விட்டுவிட்டா செல்வார் வெங்கட் பிரபு. நாளை அதிகாலை தெரிந்துவிடும்.