இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து சிலர் சாதித்து உள்ளனர். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மூவருமே விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் என்பது முக்கியமானது. அவர்களது வரிசையில் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் இடம் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்னும் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமல் இருக்கிறார் புகழ். சந்தானம் நடித்து வெளிவந்த 'சபாபதி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கடுத்து 'என்ன சொல்லப் போகிறாய்' படத்திலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை.
அடுத்து கடந்த வாரம் வெளிவந்த அஜித் நடித்த 'வலிமை' படத்திலும் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். அதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த வாரம் வெளியாக உள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திலாவது பேசப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்று கொள்கின்றேன்,” என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.