இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பரவலாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கும் திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பூஜாஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது படங்களில் வெற்றியை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக நான் ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே கவனமாக இருக்கிறேன். அதோடு சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது.
தெலுங்கில் நான் நடனமாடிய புட்டபொம்மா பாடலின் நடனத்தை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்தார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவரக்கூடிய நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியுள்ள நடனத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.