ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. வழக்கமான கமர்சியல் படங்களில் இருந்து விலகி மாற்று கதையில் பயணித்து ரசிகர்களை ஈர்க்க வைத்தவர். இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோரின் நடிப்பை வெளிக் கொண்டு வந்தவர் பாலா.
கடந்த 2004ம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். மதுரையில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பாலாவின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.