ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார்.
அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு முன் பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது மம்முட்டியை வைத்து மீண்டும் பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தான் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார். எண்பதுகளில் மம்முட்டி நடித்த மிருகயா என்கிற படத்தை தமிழில் சூர்யாவை வைத்து ரீமேக் செய்யலாம் என சில வருடங்களுக்கு முன்பே அமல் நீரத் முயற்சித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.