தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட அவர் கர்நாடக சங்கீதத்திற்குள் முடங்கி இருந்த திரைப்பாடல்களை வெகுஜன மக்களுக்கான இசையாக மாற்றியவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
தமிழ் இசை அமைப்பாளர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அறியப்பட்டாலும் அவர் ஒரு மலையாளி. கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். தனது மண்ணின் மைந்தன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக முதல் கட்டடமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இந்த நினைவு மண்டபம் அவர் இசை படித்து வளர்ந்த பாலக்காட்டில் கட்டப்படுகிறது.