'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது போன்று கே.வி.மகாதேவன் திரையிசையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் வந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஒரு கட்டத்தில் மாகாதேவனுக்கு வாய்ப்புகள் குறைந்து விஸ்நாதன் - ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்புகள் சென்றன.
இந்த நிலையில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது அவரது தாயார் விஸ்வநாதன் கன்னத்தில் பளார் என்று அரைந்தாராம். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது, அவர் இசை உலகின் மாகாதேவன், அவரை உன்னால் வெல்ல முடியாது, ஆனாலும் முயற்சி செய்” என்றாராம்.
இந்த தகவலை எம்.எஸ்.விஸ்வநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கே.வி.மகாதேவனுக்கு இன்று 23வது நினைவு நாள்.