2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள இவர், 2026 சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளார். அதன் முன்னோட்டமாக தொடர்ந்து அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விஷயங்களில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நாளை(ஜூன் 22) விஜய்யின் 50வது பிறந்தநாள், இதை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட தயார் ஆனார்கள். ஆனால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கூறி விட்டார் விஜய்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.