தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கி தயாரித்த பார்த்திபன் தான் மட்டுமே படம் முழுக்க நடித்து இருந்தார். அதையடுத்து அந்த படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கிறார். மேலும் தற்போது எழில் இயக்கத்தில் யுத்த சத்தம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருக்கிறார் பார்த்திபன்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பார்த்திபன் பேசுகையில், ‛‛யுத்த சத்தம் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் தான் செய்த சில மாற்றங்களை இயக்குனர் எழில் நேர்மையான முறையில் கையாண்டுள்ளார். இன்றைக்கு பெரும்பாலான இயக்குனர்கள் ஒரு இயக்குனர் தான் எழுதிய காட்சிகளை படமாக்கும்போது எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது போலவும், புதிதாக அவர்கள் சொல்லிக் கொடுப்பது போலவும் நடந்து கொள்வார். ஆனால் இயக்குனர் எழில் நான் செய்த சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதோடு மேடையில் என்னை பாராட்டியுள்ளார். இது அவரது நேர்மையை வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும் தனது இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு தகவல் வெளியிட்டார். அதாவது இந்த படத்தை 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறோம். இதற்காக பத்து வருடங்கள் போராடி 90 நாட்கள் பயிற்சி எடுத்து படமாக்கி உள்ளேன். அதோடு 64 ஏக்கரில் 58 செட்டுகள் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரே ஷாட்டில் எடுத்ததை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். வெட்டி ஒட்டியது என தெரிவித்துள்ளார்கள். அந்த அளவுக்கு ஒரே ஷாட்டில் தத்ரூபமாக படமாக்கி இருக்கிறோம். இதுவே எனக்கு கிடைத்த பெருமை என்கிறார் பார்த்திபன்.