அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் தேர்வானார்கள்.
இவர்கள் தவிர்த்து 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் விஷால் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகை குஷ்பு 1407 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவை சரளா 2வது இடத்தையும், ராஜேஷ் 3வது இடத்தையும் பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்களாக தேர்வான மற்றவர்கள் வருமாறு: மனோபாலா, அஜய்ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், லதா, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், ஸ்ரீமன், ஜெரால்டு, ரத்தன்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து.