இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததும், முழுநீள காதல் கதையாக இருந்ததும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததுடன் படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கோகிநேனி என்பவர் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் கைரேகை ஜோதிட வல்லுனராக நடித்திருந்த பிரபாஸ் குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் விக்ரமாதித்யா கைரேகை பார்த்து மற்றவர்களின் எதிர்காலத்தை சொல்பவராக நடித்துள்ளார். இந்த படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளரின் கைரேகைகளை அவர் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய நட்டம் வருவதை தவிர்த்திருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பதிவுகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.