'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் தலைவர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் சங்கத்தின் மரபுபடி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களின் பிரச்னைகளை அக்கறையோடு கேட்டறிந்த முதல்வர், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். என்றார் நாசர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது: நடிகர் சங்கம் வழக்குளை சந்திக்காமல் தேர்தல் நடந்த அன்றே நாங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்ககப்பட்டிருக்கும். ஏற்கெனவே 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க 21 கோடி தேவை. முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்பதே எங்களின் முதல் பணியாக இருக்கும். என்றார்.