இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
இலங்கையில் நடந்த இறுதிபோரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்ரியாவின் வாழ்க்கையை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் இயக்கிய கு.கணேசன், தற்போது 'காதல் செய்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் மறுத்ததோடு படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கு.கணேசன் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நான் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கியிருந்தேன். இது இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர். தணிக்கை குழுவை எதிர்த்து போராடி படத்தை வெளியிட்டேன்.
அந்த படத்திற்கு பிரச்னை செய்த அதே குழுவினர்தான் இப்போது காதல் செய் படத்தையும் பார்த்தனர். போர்க்களத்தில் பூ பட நேரத்தில் நடந்த பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு காதல் செய் படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என்கிறார்.