தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி மொட்டை தலையுடன் வந்ததை பார்த்த தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவர் கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான வில் ஸ்மித் வேகமாக சென்று அந்த தொகுப்பாளரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இந்த விருது விழா நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்ததால் இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது .
இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு அதுகுறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், வில்ஸ்மித்தின் மனைவி தொற்று நோயினால் தனது தலையில் உள்ள முடியை இழந்திருக்கிறார். இது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான விஷயமா? இதுகுறித்து கிண்டல் செய்ய வேண்டுமா? ஆஸ்கர் விருது வழங்கும்போது ஒருவரின் தலையில் முடி இல்லாததை அனைவர் முன்னிலையிலும் இப்படி பேசுவது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் வெங்கட்பிரபு. அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.