தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பேரன்பு படத்திற்கு பிறகு ராம் இயக்கி வரும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தனுஷ்கோடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரயில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நிவின்பாலி, சூரி நடித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்க இருக்கிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.