'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமவுலி அதையடுத்து ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டார். கடந்த 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைக்கு வந்த முதல் நாளில் 230 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது வரை 700 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ராஜமவுலி தற்போது அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்தப் படத்தை ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப்போகிறாராம். பெரும்பாலான படப்பிடிப்பை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்த படம் அவரது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களை விடவும் பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிறதாம்.