23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது .
இந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவனும், தனுஷும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் செல்வராகவன் அருகில் தனுஷ் மொபைல் போனில் போட்டோ எடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் .