தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது .
இந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவனும், தனுஷும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் செல்வராகவன் அருகில் தனுஷ் மொபைல் போனில் போட்டோ எடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் .