தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஒத்த செருப்பு படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து வியக்க வைத்தார். இதற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்போது அடுத்த முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 1ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த உள்ளார் பார்த்திபன். இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை தீவுத்திடலில் மே 1ல் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய அளவிலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இது என் பட இசை வெளியீடு என்பதை விட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எடுக்கும் விழா என்று சொல்லலாம். இசையில் அவர் செய்த சாதனையை கவுரவிக்கும் விழாவாகவும் இருக்கும்'' என்றார்.