தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்-13ம் தேதி வெளியாக உள்ளது.. ஆனாலும் இப்போது வரை இந்தப்படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடித்துள்ளார் என்கிற விஷயத்தை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். முதலில் செல்வராகவன் வில்லன் என்றார்கள்.. ஆனால் அவரோ வில்லன்கள் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியாக தான் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலரில் முகமூடி அணிந்த வில்லன் நபரை பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி மனிதர் என்றும், அவர்தான் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூட சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்த முகமூடி மனிதரே தான் யார் என்கிற உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல.. பாலிவுட் நடிகர் அங்கூர் விகால் தான்.. அதுமட்டுமல்ல மூன்று வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான மெஹந்தி சர்க்கஸில் கதாநாயகியின் முறை மாப்பிள்ளையாக நடித்திருந்ததும் இவர் தான். ஆனால் பீஸ்ட் படத்தில் இவர் தான் மெயின் வில்லனா என்கிற கேள்விக்கு மட்டும் மனிதர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்..