துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். அதேசமயம் பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சுந்தர். சி. இப்படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில், இந்த படத்திற்கு பட்டாம்பூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு இப்படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.