இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1984ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடித்து வந்தார். ரஜினியுடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்ட நதியா, திருமணத்திற்கு பிறகும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்துள்ள அன்டே சுந்தராநானிகி என்ற படத்தில் நதியாவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். முதன்முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள நதியா, நான் டப்பிங் பேசுவதற்கு ஊக்கமளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.