தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வாத்தி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார் தனுஷ். தெலுங்கு தமிழில் தயாராகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கிறார்கள். இந்த படம் கல்வி மாபியாக்களின் கதை என்றும், இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
படத்திற்கு ஜீ.பி.பிரகாஷ் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.