தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சினிமாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை கலந்து கருத்துக்களை கூறிவந்த விவேக், இன்னொரு பக்கம் மரம் நடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான சிறப்பான பங்களிப்பை தந்துள்ள, தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்துவந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது இந்த கோரிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது, “உண்மையிலேயே இப்படி அவரது தெருவுக்கு விவேக்கின் பெயரை சூட்டுவது அந்த மக்கள் கலைஞனுக்கு செய்யும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்” என்றும் வரவேற்றுள்ளார்.