மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
மதுரை, மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் என் மகன் என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் 2017-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தனுஷ் போலி பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தார். இதற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய, அந்த சான்றிதழ் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பு என் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.