ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி. தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் வருவதை அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள். அப்போது அங்கு சென்ற அனுபமா ரசிகர்களைப் பார்த்து கையசைத்து படி சென்றுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் ஏற வந்த அவருடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள். ஆனால் அனுபவம் போலீஸ் பந்தோபஸ்துடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முற்பட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரது காரை செல்லவிடாமல் ரகளை செய்ததோடு, கார் டயரில் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்கள். இதனால் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அனுபமா. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.