இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே .சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால் வாலி ஹிந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே .சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதை திரைக்கதை தனக்கே சொந்தம் . அதனால் வாலி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் .ஜே. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனபோதிலும் இப்படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அவர் வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் ஹிந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.