இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 1000 கோடி வசூலைக் கடந்தால்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
மணிரத்னம் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் 'செக்கச் சிவந்த வானம்'. அப்படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக மட்டுமே அவர் உழைத்து வருகிறார். மணிரத்னம் 'டச்' உடன் 'பொன்னியின் செல்வன்' இருந்தால் 1000 கோடி வசூல் எளிதுதான்.