தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட்பிரபு எங்கு சென்றாலும் அவரை துரத்தும் ஒரு கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம். இது குறித்து ஏற்கனவே தான் அளித்த பல பேட்டிகளில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடத்தில் கூறி விட்டதாகவும் அவரது அழைப்பு எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் மங்காத்தா-2 படம் குறித்து இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அதோடு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். இந்த கதையை அவர்கள் இருவரிடத்திலும் கூறிவிட்டேன். மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.